×

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீஸ் சம்மன்: வழக்கு பதிவு செய்ய திட்டம்

சென்னை: பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை நடிகர் சித்தார்த்துக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாபில் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவு செய்து இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் பெண்களை இழிவு்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இதற்கு நாடுமுழுவதும் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தேசிய மகளிர் ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து நடிகர் சித்தார்த் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பினர்.அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார், நடிகர் சித்தார்த் பதிவு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அவர்களின் ஆலோசனையை  தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது குறித்து, நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் ஓரிரு நாளில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது விளக்கத்தை பொறுத்து நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post பேட்மின்டன் வீராங்கனை சாய்னா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீஸ் சம்மன்: வழக்கு பதிவு செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Siddharth ,Saina ,Chennai ,Saina Nehwal ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு...